Friday 9 February, 2018

திருப்பெரும்துறை

திருவாசகம் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதை திருப்பெருந்துறை ( ஆவுடையார் கோவில் ) யில் பாதுகாத்து வருகிறார்கள் . அது ஒரு தனி சந்நிதியில் இருக்கிறது . நாங்கள் போனபோது யாரோ ஒரு சிவனடியார்க்கு குருக்கள் கதவை திறந்து எடுத்து காட்டினார்கள் . நாங்களும் பார்த்தோம் . அந்த சிவனடியார் கண்ணீர் மல்க விழுந்து கும்பிட்டார் . எங்களுக்கும் காட்டினார் " தொடாமல் பாருங்க " என்று சொல்லி . எந்த காலத்தில் யார் எழுதியது எனத் தெரியவில்லை . அந்த சிவனடியாரிடம் கேட்டேன் . இது மாணிக்க வாசகர் எழுதியதா ? என்று . அப்பா இது சாட்சாத் பரமேஸ்வரனே மாணிக்க வாசகர் சொல்ல தன் கையால் எழுதியது என்றார் . நம்பிக்கைகளுக்கு பலம் ஜாஸ்தி . ஆய்வுகள் எதுவும் இங்கு முக்கியமில்லை . எல்லாமே சொப்பனம் என்னும் வாழ்வில் . அந்த கணம் , அந்த இடம் , அந்த குரல் , அந்த உணர்வு , அந்த சுவடி , இவைகளை புதிதாக உணர்ந்தேன் . இதற்குமுன் ஒருமுறை இங்கு வந்தபோது இந்த சுவடியை ஏன் பார்க்க முடியவில்லை என்பதற்கும் , இன்று அந்த சிவனடியார் வழியாக ஏன் பார்க்க கிடைத்தது என்பதற்கும் எந்த பதிலும் இதுவரை இல்லை . திருவாசகக் கோவில் எனும் இந்த சந்நிதியில்தான் அந்த ஓலைச்சுவடி இருக்கிறது .

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே