இப்படியெல்லம் கூட வைணவ பக்தி இருந்திருக்கிறது.என்ன ஒரு வன்மம் இந்த பாசுரத்தில்.
”பச்சைமா மலைபோல் மேனி ” போன்ற மென்மையான உணர்வுகளை பதிவு செய்யும் பாசுரங்களை இயற்றிய தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாசுரம் தான் இது. அந்த அளவிற்கு சமண , பவுத்தர்களின் அராஜகம் இருந்ததா அல்லது அவர்களின் வளர்ச்சி கண்டு பொறுக்க மாட்டாமல் இவர்கள் இருந்தார்களா தெரிய்வில்லை. என்ன இருந்தாலும் “தலையை அறுக்கும் கருமம் கொஞ்சம் ஓவர் தான்”
.
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில்
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய்
ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ண னே.(என்
கண்ணனே. கதறு கின்றேன்,
ஆருளர்க் களைக் ணம்மா.
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே