Wednesday 13 April, 2011

சேஷ ராயர் மண்டபம்





பாயும் குதிரையுடன் போர்க்களக்காட்சி





குதிரையின் வால்.



யானை மீதிருந்து புலியைக் கொல்லும் வீரன்.

(வீரனின் உடல் மொழி வியக்கத்தக்கதாய் இருக்கிறது ஓவியத்தில் மட்டுமே இது சாத்தியம்.)



இது என்ன என்று தெரியவில்லை, தலைக்குப் பதிலாக மரம் இருக்கிறது, ஏதாவது புராணக் காட்சி யாக இருக்கலாம்.




அந்தக்கால ஜிம்நாஸ்டிக்ஸ். ( கழைக்கூத்தாடிகளா?)





நோ கமெண்ட்ஸ்.



வெள்ளை கோபுரம் பி புலத்தில்.




சீன வீரர்களாக இருக்க வேண்டும், மீசை வித்தியாசத்தைப் பாருங்கள்.





நின்ற நிலையில் நரசிம்மர்.


ஸ்ரீரங்கம் கோவிலில் சேஷ ராயர் மண்டபம் சிற்ப வேலைப்படுகளூடன் கூடிய அழகிய மண்டபம். கிழக்கு வெள்ளை கோபுர வாயிலின் வழியாக உள்நுழையும் போது இடது புறம் இருக்கிறது சேஷ ராயர் மண்டபம். இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் (கி.பி.1509-1529) அமைக்கப்பட்டதாகத் தெரிகிற்து.ஒரு வரிசைக்கு 12 தூண்கள் என எட்டு வரிசைத் தூண்களைக்கொண்டது இம் மண்டபம்.முதல்வரிசை 8 தூண்களிள் தான் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. வாலிசுக்ரீவ வதம், தொங்கு மீசை கொண்ட சீன வீரர்கள்,தொடையில் சொறுகி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கத்தி,ஜிம்நாஸ்டிக்,யானை மீதிருந்து புலியை லாவகமாக ஈட்டியால் சொறுகும் வீரன் என நுனுக்கமான சிற்பங்கள் நிறைந்துள்ளது.
பார்த்து ரசித்து வியக்க வேண்டிய ஒரு மண்டபம் இது.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே