Sunday 10 April, 2011

உத்தமர்கோவில்

09.03.2011 திருச்சிக்கு அருகிக் உள்ள உத்தமர் கோவில் சென்றுவந்தோம்.திருச்சியிலிருந்து 15 கீ.மீ தொலைவில் உள்ளது.பிரம்மா, விஷ்ணு,சிவன் என மூன்று தெய்வங்களும் குடிகொண்டுள்ள கோயில். கோயிலின் உள்ளே வளைத்து வளைத்து ஏகபட்ட சன்னதிகள். கிழக்கு நோக்கி பெருமாள் மேர்கு நோக்கி சிவன் சண்டிகேஸ்வரர், துர்க்கை,அனுமன்,அம்பாள் சன்னதி , தாயார் சன்னதி என நிறைய சன்னதிகள்.திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். ஊரின் பெயர் பிச்சாண்டார் கோவில்.

ஸ்ரீரங்கத்தில் இன்று பூச்சாத்து.நம்பெருமாள் கோடைமண்டபத்தில் பூக்களுடன் காட்சிதந்தார்.நாங்கள் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது பட்டாபிராமர் சன்னதி வழியாக நம்பெருமாள் வந்து கொடிருந்தார்.பக்தர்கள் கையில் தொடுத்த பூச்சரத்தினை வைத்துக் கொண்டு காத்திருந்தனர். சாத்தாதார் சிலர் அப்பூச்சரங்களை பெற்று கையில் அடுக்கியபடி வந்தனர். நானும் வீட்டில் பூத்த சில மனோரஞ்சிதப்பூக்களை கொடுத்தேன். உதிர்ந்து விடும் தொடுத்ததாய் இருந்தால் பரவாயில்லை என சொன்னார். அடுத்தமுறை தொடுத்து கொண்டுவரவேண்டும்.

பி-கு
பிர்மாநந்தா சர்பத் ரூ 10 ஆகிவிட்டது

தேர்தல் ஆணைய கெடுபிடியினால் திருவிழாபோலவே இல்லை. துக்க வீடு போல ஊரே களையிழந்து இருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே