சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில்
இன்று சக்கரத்தாழ்வார் சேவை,தாயார் சேவை செய்தாயிற்று. அரங்கனை காண ஏகக்கூட்டம் .பிரதட்சிணம் மட்டும் செய்து விட்டு வந்தோம். தாயார் சன்னதியில் வழங்கப்படும் மஞ்சளைக் கொண்டு ஒரு பெண் சன்னதிக்குள்ளேயே சுவரில் நாமம் வரைந்து கொண்டிருந்தார்.இதைவிட அரங்கன் சன்னதி சுற்றில் சேனை முதலியாருக்கு பக்கவாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று ரங்க விமான கலச தரிசனம் பார்க்க அடையாளமாக தரையில் பித்தளை தகடு பதிக்கப்பட்டிருந்தது.யாரோ ஒரு புண்ணியவான் அதன் மீது கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார்.தகடு உறுகி இப்போது கருத்துப்போய் இருக்கிறது.பக்தர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.
பிரசாதம்: வடை,புட்டு,புளியோதரை, தோசை வித் ஊறுகாய்.
அத்தனையும் நானே சாப்பிடவில்லை.குழந்தைகளுக்கு பார்சல்.நானும் ஜயந்தியும் வடை ,புளியோதரை,தோசை மட்டும் சாப்பிட்டோம்.
காவேரியில் இரு கரையும் தண்ணீர்.சுபிட்ஷம்.
Saturday 8 August, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே