Sunday 4 January, 2009

திருவரங்கத்து சிறப்பு தோசை



திருவரங்கத்தில் மார்கழிமாதத்தில் பல விசேஷங்கள் உண்டு.பகல்பத்து,இராப்பத்து, அரயர்சேவை,முத்தங்கி சேவை, என சிறப்புகள் நீண்டு கொண்டே போகும்.அதை பற்றியெல்லாம் இங்கு நான் எழுதப்போவதில்லை.இந்த நாட்களில்மட்டுமே பிரசாதமாகக் கிடைக்கும் சம்பாரதோசை பற்றிய பதிவு இது.தோசை என்றால் எந்த அளவு இருக்கும், எவ்வளவு மொத்தம் இருக்கும், என்று உங்களுக்குள் ஒரு கற்பணை இருக்கும். அதையெல்லாம் தவிடு பொடி யாக்கிவிடும் நேரில் பார்த்தால். நெய் தோய்ந்து இருக்கும்.வாயில் போட்டால் அவ்வளவு சுவை.தொட்டுக்கொள்ள வேறு ஒன்றும் தேவை யில்லை.(கேட்டால் நம்மை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.)ஒரு தாம்பாளம் சைசில் இருக்கும். அதனை பாதியாக்கி அதயும் பாதியக்கி அதயும் பதியாக்கி ஒருவர் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும். இன்றய விலை ரூ.100/ எட்டு பேர் சாப்பிடலாம்.ஒருமுறை இந்த 20 நாட்களில் வந்து இதனை சுவைத்துப் பாருங்கள் அப்புறம் வருடா வருடம் வந்துவிடுவீர்

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே